Wednesday, November 08, 2006

மாதவம் செய்த எம் மாதவன் தாளில் அர்ப்பணம் இந்த வலைப்பூ


எத்தனையோ சேவைகளை அன்னை பூமிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆற்றி வருகின்றனர். பற்பல துறைகளில் அவர்கள் இப்பணிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக நமது சமுதாயக் குடும்பத்தின் நலிவடைந்த சகோதர சகோதரிகளுக்கு ஆற்றிவருகின்றனர். இச்சேவைகள் அமைதியாக நடைபெறுகின்றன. தம்மை முழுமையாக தாயின் தாளில் அர்ப்பணித்த பாரத அன்னையின் புதல்வர்களின் புதல்விகளின் சேவை மலர்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே!
அன்பர் பணி செய்ய எம்மை ஆளாக்கிவிட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!

1 comment:

தகட்டூரான் said...

எப்படி மலேசிய நாட்டில் தோன்றிய இனம் மலாய் இனமோ, கிரேக்கத்தில் தோன்றிய இனம் கிரேக்க இனமோ, அது போல இந்தியாவில் தோன்றிய இனம் இந்து இனம். இந்த தன்மை இந்து தன்மை. இந்த வாழ்க்கை முறை இந்து வாழ்க்கை முறை. இங்குள்ள கிருத்துவனும் முஸ்லிமும் இந்தியர்கள். ஆனால் அவர்கள் தழுவும் மதம் வெளிநாட்டு மதம். விதேசி மதம். விதேசி மதத்தை தழுவியதாலேயே அவர்கள் வேறு மக்கள் அல்ல. அதாவது, ஒரு ஹிந்துவின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவும், இங்குள்ள கிருத்துவரின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவும், ஒரு முஸ்லிமின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவும் சகோதரர்களே.இந்தியர் எம்மதத்தினராக இருந்தாலும் இந்திய கலாச்சாரத்தை, இந்திய வாழ்க்கை முறையை, இந்திய குடும்ப அமைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியனாக வாழ வேண்டியது அவசியம். அதாவது இஸ்லாம் மார்க்கத்தையோ, கிருத்துவ மார்க்கத்தையோ, சன்மார்க்கத்தையோ, சக மார்க்கத்தையோ இன்னும் இன்னபிற மார்க்கத்தையோ தழுவும் எந்த ஒரு இந்தியரும் அடிப்படையில் இந்துவே.அவர்கள் இந்திய கலாச்சாரத்தை, இறையாண்மையை, வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொண்டு இந்துவாக வாழ்வதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.